திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி அருகே இருக்கக்கூடிய
வேங்கைபுரத்தை சேர்ந்தவர்
வேல்முருகன் வயது 30 விவசாய கூலித்தொழிலாளி இவருடைய மனைவியின் பெயர் கோமதி வயது 25
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அவந்திகா(இரண்டரை
வயது)
வேல்முருகன்
மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்வதில்லை மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு
செய்வார் கொடுக்கவில்லை என்றால் மனைவிக்கு அடி உதை தான்.இன்று காலை சுமார் நான்கு
மணி அளவில் வேல்முருகன் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார் கணவன் மீதிருந்த
கோபத்தால் மறுத்துள்ளார் இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது வேல்முருகன்
தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய பெண் குழந்தை அவந்திகாவை இரு கால்களையும் பிடித்து
துணி துவைப்பது போல சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார் இதனால் மண்டை உடைந்து ரத்தம்
வெளியேறியது உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
மேலும் தற்போது வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்