நம்முடைய இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும்
சுற்றுலா கழகம் ஐஆர்சிடிசி ஒரு சூப்பரான டூர் பேக்கேஜை தற்போது அறிவித்துள்ளது.
அதாவது அந்தமான்
மற்றும் நிக்கோபார் தீவுகளை 4 இரவுகள் மற்றும்
5 பகல்கள் சுற்றிப்பார்க்கவும்
ஒருவருக்கு 20 ஆயிரத்து 120
ரூபாயும் மேலும் உணவு,தங்கும் வசதி,சுற்றிப்
பார்ப்பதற்கான செலவுகள் போன்றவற்றை எல்லாமே இதில் அடங்கும் குறிப்பாக ஜிஎஸ்டி
தொகையும் இதில் அடங்கும்.மேலும் உங்களுடைய
குழந்தைக்கு ஒன்று முதல் நான்கு வயதுக்குள் இருந்தால் அதற்கு எந்த செலவும் செய்யத்
தேவையில்லை இலவசமாக அழைத்துச் செல்லலாம் நான்கு வயதுக்கு மேல் ஆகிவிட்டால்
உங்களுடைய குழந்தைக்கு 19 ஆயிரத்து 815
ரூபாய் நீங்கள் செலுத்திய
செல்லவேண்டும்.வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி உள்ளதால் இதற்கு முன்பாக
நீங்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.