Tuesday, June 19, 2018

சென்னையில் கட்டுமான வேலைக்குவந்த பெண்ணுக்கு செக்யூரிட்டியால் நடந்த கொடுமை

சென்னை மயிலாப்பூரில் இருக்கக்கூடிய சிருங்கேரி மடம் சாலையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.




அங்கு செம்மஞ்சேரியை சேர்ந்த முருகேசன் என்பவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று சுமார் பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு மதிய உணவு இடைவேளையின் போது அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.அந்த நேரத்தில் மூதாட்டி ராணி வயது 60 என்பவர் தனியாக ஒரு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அப்போது ராணி தனியாக இருப்பதை கவனித்த செக்யூரிட்டி அவர் அறைக்குச் சென்று ராணியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார் இதனை சற்றும் எதிர்பாராத மூதாட்டி ராணி சத்தம் போட்டுள்ளார்.அந்த சத்தத்தை கேட்டு அனைவரும் ஓடி வந்து செக்யூரிட்டி முருகேசனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.மேலும் உடனடியாக காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து புகாரளித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது





Subscribe to get more videos :