சிவமலை சூழ புரத்தைச்
சேர்ந்த எத்திராலு மகன் சிவபாண்டியன் வயது 22 மற்றும் கதிர்வேல் மகள் செல்வமணி வயது 19 இவர்கள்
இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும்
உறவு முறையில் அண்ணன் தங்கை அதனால் காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை.எங்கே தன்னுடைய காதலை பெற்றோர்கள்
பிரித்துவிடுவார்களோ என எண்ணி இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டார்.கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் ஆகியும் போலீஸ்
நிலையத்தில் பெற்றோர்கள் எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை.
நேற்று தேனி
மாவட்டம்,குரங்கணியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய கல்லாறு
வனப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது ஆண் மற்றும் பெண் எலும்புக்கூடுகள் கிடந்தது அவர்கள்
அதைக் கைப்பற்றிய போலீஸார் விசாரித்தபோது அவர்கள் அண்ணன் தங்கை என்றும் காதலை ஏற்காததால் ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற
தகவல் கிடைத்ததும் 42 நாட்கள் ஆகியும்
புகார் தெரிவிக்கவில்லை என்பதால் பெற்றோர் மீது போலீசார் விசாரணை நடத்தி
வருகிறார்கள்.