Tuesday, June 19, 2018

பெண்களே உஷார் இன்னைக்கு இந்த பெண்ணுக்கு நடந்தது நாளைஉங்களுக்கும் நடக்கலாம்

பொதுவாக பெண்கள் விழாக்களுக்கு செல்லும் போதோ அல்லது அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களுக்கு செல்லும் போதும் வீட்டிலேயே மேக்கப் போட்டுக் கொள்ள நேரம் கிடைக்காமல் இருப்பதால் போகும் வழியிலேயே வாகனத்திலேயே அவர்கள் மேக்கப் போட்டுக் கொள்வது வழக்கம்.


ஆனால் இது எந்த வகையில் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு தாய்லாந்தில் நடந்த உண்மை சம்பவம் காரணமாக உள்ளது.தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய தோழியை பார்ப்பதற்காக  காரில் சென்றிருந்தார் காரை அவரது டிரைவர் ஓட்டிக்கொண்டிருந்தார்.அவருக்கு வீட்டில் மேக்கப் போட்டுக்கொள்ள நேரம் கிடைக்காததால் காரின் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு மேக்கப் போட்டுக்கொண்டு வந்து இருந்தார்.அப்போது கன்னிமைக்கு பென்சிலை வைத்து மேக்கப் போட்டுக்கொண்டு கொண்டிருந்தார் அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானதில் அந்தப் பென்சில் அவருடைய கண்ணில் சொருகிக் கொண்டது இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை உடனடியாக நிறுத்தி வேறு ஒரு காரில் அந்தப் பெண்ணை ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அதிஷ்டவசமாக உடனடியாக அறுவைசிகிச்சை செய்ததால் அந்த பெண்ணுக்கு பார்வையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை நலமுடன் இருக்கிறார்.


Subscribe to get more videos :