திருவண்ணாமலை
மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது
மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அவர் வீட்டில் அருகே இருக்கக்கூடிய ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளி
முடிந்து வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற வாலிபர் அவரை
வழிமறித்து உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார் ஆனால் அந்த சிறுமி
நிற்காமல் நடந்து சென்றுள்ளார் மேலும் அந்த பெண்ணை பித்தொடர்த்து சென்று அவர்
கையைப் பிடித்து நான் உன்னை காதலிக்கிறேன் என்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு
வற்புறுத்தி உள்ளார்.அதற்கு எந்த பதிலும் சொல்லாமல்
போனதால் கோபமடைந்த அந்த வாலிபர் பொது இடம் என்று கூட பார்க்காமல் பொதுமக்கள்
முன்னிலையில் அந்தச் சிறுமியை பலவந்தமாக தாக்கி உள்ளார். இதனை சற்றும்
எதிர்பாக்காத பொதுமக்கள் அந்த சிறுமியை அந்த வாலிபர் இருந்து மீட்டு உடனடியாக
காவல்துறைக்கு போன் செய்து அந்த இளைஞரை ஒப்படைத்துள்ளனர் அதன்பிறகு காவல்துறையினர்
கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.