கேரள மாநிலம்
திருச்சூர் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு பேஸ்புக் மூலம் அதே
பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்க களுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அந்த நான்கு இளைஞருடன் வீடியோ
சாட்டிங் பண்ணும் அளவுக்கு நெருக்கம் ஆகியுள்ளார். மேலும் இந்த
இளம்பெண் வீடியோ சாட்டிங் செய்யும் போதெல்லாம் புது புது ஆடைகளும் விலை உயர்ந்த
நகைகளை அணிந்து வீடியோ சாட்டிங் செய்வது வழக்கம். இதை கவனித்த
நான்கு இளைஞர்களும் இந்த பெண்ணிடம் பணம் நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.அதன்படி அந்த பெண் செய்த வீடியோக்களை மார்பிங்
செய்து ஆபாசமாக சித்தரித்து வேறு ஒரு நம்பரில் இருந்து அந்த பெண்ணிற்கு அனுப்பி
அவளை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
கிட்டத்தட்ட
அந்தப் பெண்ணிடம் இருந்து 10 லட்சம் வரை தவணை
தவணையாக பணம் பறித்துள்ளார் அந்த பணத்தை வைத்து அந்த நான்கு பேரும் சொந்தமாக ஒரு
காரை வாங்கி சுற்றுலாத்தலமான ஊட்டி கொடைக்கானல் என பல இடங்களில் சுற்றித் திரிந்த பணத்தையெல்லாம் செலவளித்துள்ள்ளனர்.பிறகு மீண்டும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்கள்
இதனால் அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன்பிறகு போலீஸார் கூறியது
போல ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அந்த
இளைஞரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.அந்த இளைஞர்களும்
அந்தப் பெண் கூறியதுபோல ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்துள்ளார்கள் அப்போது
மறைந்திருந்த போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்
சென்று லாக்கப்பில் வைத்து தர்மஅடி கொடுத்துள்ளார்கள் மேலும் அந்த இளைஞர்கள் மீது
வழக்குப்பதிவு செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளார்கள்